11 அக்., 2007

அக்டோபரில் மிளகாய் விதைக்கலாமா ?

தாளிதப் பொருட்களில் மிளகாய் மிகவும் முக்கியமானது ஆகும். அதன் காரத்தன்மை மற்றும் சிவப்பு நிறம் ஆகியவற்றிற்காக மிளகாய் விரும்பப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 15 இலட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 70 இலட்சம் டன் மிளகாய் வத்தல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் சுமார் 12 இலட்சம் டன் மிளகாய் வற்றல் உற்பத்தியாகிறது. மிளகாய் தமிழ்நாட்டில் 49,000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மிளகாய் விதைப்பு அக்டோபர் முதல் நவம்பர் வரை ஆகும். சந்தைக்கு மிளகாய் வரத்து ஜனவரி * ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இருக்கும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், இராமநாதபுரம், பரமகுடி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் சென்னை சந்தைகளிலும் மற்றும் மிளகாய் வர்த்தகர்களிடம் ஆய்வினை மேற்கொண்டனர். சந்தைத் தகவலின்படி, 2005-06ம் வருடத்தில் சீனா இந்தியாவிலிருந்து அதிகளவு மிளகாய் வற்றலை இறக்குமதி செய்தது. இதனால் வரலாறு காணாத விலையாக கிலோவுக்கு ரூபாய் 75 என்ற நிலையை அடைந்தது. அதன் காரணமாக மிளகாய் பரப்பளவு அதிகரித்தது. கடந்த ஆண்டு (2006-07) மிளகாய் சாகுபடியின் பொழுது பெய்த போதுமான மழையினால் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்தது. இதனால் இந்த ஆண்டு குண்டூரில் 45௫0 இலட்ச மூட்டைகளும் (40 கிலோ/மூட்டை), தமிழ்நாட்டில் 15 இலட்சம் மூட்டைகளும் (20 கிலோ/மூட்டை) குளிர்ப்பதனக் கிடங்கில் இருப்பு உள்ளது. இது தவிர தமிழ்நாடு மற்றும் குண்டூர் விவசாயிகளிடம் சுமார் 10௧4 இலட்ச மூட்டைகள் இருப்பு உள்ளது. கடந்த மாதத்தில் (ஆகஸ்டு, 2007) குளிர்ப்பதனக் கிடங்கில் சேமித்த ஒரு கிலோ மிளகாயின் விலை ரூ. 50௫5 ஆகவும், கிடங்கில் வைக்காத மிளகாயின் விலை ரூ.35 ஆகவும் இருந்தது.
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ந.இரவீந்திரன் மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் செல்வி.வ.சி.பிரேமா ஆகியோர் விருதுநகர் சந்தையில் பெறப்பட்ட மிளகாயின் மாத விலைகளை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதன்படி அக்டோபர் மாதத்தில் விதைக்கப்பட்டு ஜனவரி 2008ல் அறுவடை செய்யப்படும் மிளகாய் வற்றலின் விலை குறைந்து, கிலோவிற்கு ரூ.25 முதல் 30 வரையே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குண்டூர் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களிலுள்ள குளிர்ப்பதனக் கிடங்கில் அதிகமான இருப்பு மற்றும் அதிக உற்பத்தி ஆகியன இவ்விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகும்.
எனவே விவசாயிகள் அறுவடைக் காலத்தில் எதிர்பார்க்கப்படும் மிளகாய் வற்றலின் விலையான ரூ.25௩0 என்பதைக் கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் மாதத்தில் மிளகாய் நடவு செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தை www.tnagmark.tn.nic.in என்ற இணையதளத்திலும், tnaudemic@gmail.com என்ற மின் அஞ்சலிலும், 0422 / 2431405 என்ற தொலை பேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் ஆதாரம் : உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்

கருத்துகள் இல்லை: