21 நவ., 2008

கதர் கிராமத்தொழில்கள்

மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம் - கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம்
தகுதியுடைய திட்டங்கள்

இந்தத் திட்டம் கிராமப் புறங்களில் புதியதாக அமைக்க வாய்ப்புள்ள அனைத்து கிராமத்தொழில் திட்டங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.

தகுதியான தொழில்கள்

116 வகையான தொழில்கள் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் நடத்தக் கூடாத தொழில்கள் என்பதையும் (நெகடிவ் திட்டங்கள்) தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கிக் கடனின் நிலையான முதலீட்டில் அதிக பட்சம் ஒவ்வொரு ரூ.50,000/- க்கும் குறைந்தது ஒரு நபருக்கு வேலை வாய்ப்பும் அளித்தல் வேண்டும்.


பல்வேறு வகையான கிராமத் தொழில்கள்

தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள் பற்றிய அட்டவணை

1. மண்பாண்டம் தயாரித்தல்

2. கிளிஞ்சல் மற்றும் சுண்ணாம்பு

3. கல்வெட்டுதல், ஜல்லி அரைத்தல், செதுக்குதல் (கட்டிடம் மற்றும் கோயிலுக்கு)

4. கல்லில் செய்யப்படும் பயன்பாட்டுப் பொருட்கள்

5. சிலேட்டு மற்றும் சிலேட்டுப் பென்சில் செய்தல்

6. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல்

7. பாத்திரம் கழுவும் பவுடர்

8. எரி பொருளாகப் பயன்படும் கரி

9, தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த செயற்கை கற்களால் செய்யப்படும் ஆபரணங்கள்

10. கோலப்பொடி

11. வளையல்

12. பெயிண்ட், வார்னிஷ், டிஸ்டம்பர் மற்றும் கலர் பொடிகள்

13. கண்ணாடிப் பொம்மைகள்

14. கண்ணாடி அலங்காரத் தொழில்

15. செயற்கை வைரம் கட்டிங்

வனம் சார்ந்த தொழில்கள்

16. தேனீ வளர்த்தல்

17. கத்தாழை வளர்த்தல்

18. பசை, பிசின் தயாரித்தல்

19. அரக்குத் தயாரித்தல்

20. மூங்கில் கூடை செய்தல்,

21. விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்

22. வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்

23. போட்டோ பிரேம்

24. நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்

25. இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்

26. வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்

கையால் செய்த காகிதம் மற்றும் நார்ப்பொருட்கள்

27. கைக்காகிதம்

28. காகிதத்தினால் செய்யப்படும் தட்டு, கிண்ணம் பை மற்றும் அட்டை பெட்டிகள்

29. புத்தக பைண்டிங் கவர், நோட்புக் செய்தல்

30. சணற் பொருட்கள் (நூல் தவிர)

31. கயிறு மற்றும் நார்பொருட்கள்

வேளாண் சார்ந்த உணவுப் பொருட்கள் / சார்புத் தொழில்கள்

32. அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் பதனிடுதல் / மசாலா பவுடர் / அப்பளம் / ரொட்டி பேக்கரி பொருட்கள் செய்தல்

33. இடியாப்பம்

34. சமையல் எண்ணெய் தயாரித்தல்

35. கோதுமை, ரவை தயாரித்தல்

36. சிறிய ரைஸ் மில்

37. பனை பொருட்கள் / பனை வெல்லம்

38. கரும்பு வெல்லம் / கண்டசாரி சர்க்கரை செய்தல்

39. மிட்டாய், தின்பண்டம் தயாரித்தல்

40. கரும்புச்சாறு செய்தல்

41. கேழ்வரகு, மக்காச்சோளப் பொருட்கள் தயாரித்தல்

42. முந்திரிப்பருப்பு தயாரித்தல்

43. பால்பொருட்கள் தயாரித்தல்

44. மாட்டுத் தீவனம் / கோழித் தீவனம் தயாரித்தல்

பாலிமர் மற்றும் ரசாயண சார்புத் தொழில்கள்

45. தீப்பெட்டி

46. அகர்பத்தி

47. பட்டாசு

48. தோல் பதனிடுதல்

49. சோப்பு தயாரித்தல்

50. ரப்பர் பொருட்கள்

51. ரெக்ஸின்

52. பி.வி.சி. பொருட்கள்

53. கொம்பு, எலும்பு, தந்தப் பொருட்கள்

54. மெழுகுவர்த்தி, சூடம் மற்றும் அரக்கு

55. பிளாஸ்டிக் பொருட்கள்

56. பொட்டு தயாரித்தல்

57. மருதாணி தயாரித்தல்

58. வாசனைத் தைலம் தயாரித்தல்

59. ஷாம்பு தயாரித்தல்

60. ஹேர் ஆயில்

61. டிடர்ஜெண்ட், சலவை பவுடர்

பொறியியல் மற்றும் மரபு சாரா எரிசக்தி

62. தச்சுவேலை

63. இரும்பு வேலை

64. அலுமினியப் பாத்திரங்கள்

65. சாண எரிவாயு

66. கழிவுப் பொருட்கள் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்தல்

67. பேப்பர் பின், ஸ்டவ் பின், ஊக்கு, கிளிப்புகள் தயாரித்தல்

68. அலங்கார பல்புகள், கண்ணாடிக்குடுவைகள் மற்றும் கண்ணாடி

69. குடை தயாரித்தல்

70. சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் கருவிகள்

71. பித்தளைப் பாத்திரங்கள்

74. பாத்திரம் இல்லாத பித்தளை, செம்பு, வெண்கலப் பொருட்கள்

75. ரேடியோ

76. கேஸட் பிளேயர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்

77. வோல்டேஜ் ஸ்டெபிலைசர்

78. எலக்ட்ரானிக் கடிகாரம் மற்றும் அலாரம் கடிகாரம்

79. கேஸட் ரெக்கார்டர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்

80. மரத்தினால் செய்யப்படும் அழகுப் பொருட்கள்

81. தகரப் பொருட்கள்

82. வயர் நெட்

83. இரும்பு கிரில்

84. மோட்டார் வைண்டிங்

85. வண்டி, மாட்டு வண்டி, சிறிய படகுகள் தயாரித்தல், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் அசெம்பிளிங்

86. இசைக்கருவிகள் தயாரித்தல்

ஜவுளி தொழில் (கதர் நீங்கலாக) மற்றும் பிற தொழில்கள்

87. பாலிவஸ்திரா

88. லோக்வஸ்திரா

89. பனியன்

90. ரெடிமேட் துணிகள் தயாரித்தல் / டெய்லரிங்

91. பொம்மை தயாரித்தல்

92. சாயம் / சாய அச்சுத் தொழில்

93. கம்பளி மற்றும் நூல்கண்டுகள்

94. எம்பிராய்டரி

95. மருத்துவத் துறைக்கானபேண்டேஜ்கள்

96. ஸ்டவ் திரிகள்

97. எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள்

98. லாண்டரி / சலவையகம்

99. பார்பர் / முடித்திருத்தகம்

100. பிளம்பிங்

101. வீட்டில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுபார்த்தல்

102. டயர் வல்கனை சிங்

103. பம்ப்செட், டீசல் எஞ்சின் பழுதுபார்த்தல்

104. விவசாயப் பொருட்களுக்கான ஸ்பிரேயர், பூச்சி மருந்து பம்ப்செட்டுகள் பழுதுபார்த்தல்

105. ஒலி, ஒளி அமைப்புகளுக்கான ஒலி பெருக்கி, ஆம்பிளிபையர், மைக் போன்றவை வாடகைக்கு விடுதல்

106. பேட்டரி சார்ஜ் செய்தல்

107. பேனர் / கலைத்தட்டிகள் வரைதல்

108. சைக்கிள் ரிப்பேர் கடை

109. கட்டிட வேலைகள்

110 பேண்ட் வாசிக்கும் குரூப்கள்

111. மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் (பைபர் கிளாஸ்)

112. வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்

113. இசைக்கருவிகள்

114 உணவகம் (மதுபானம் நீங்கலாக)

115. தேனீர் விடுதி

116. அயோடின் கலந்த உப்பு

குறிப்பு: வரிசை எண். 111, 112, 113 - கோவா மாநிலத்திற்கு மட்டும்



கே. வி. ஐ. சி. திட்டத்தின் கீழ் தகுதி பெறாத தொழில்கள்

நெகடிவ் திட்டங்கள் (மார்ஜின் தொகைத் திட்டத்தில் சாராதவை)

கதர் கமிஷன் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளால் அவரது கொள்கைகளுக்கு இணங்க தொடங்கப்பட்டது. எனேவ சில திட்டங்கள் காந்தீயக் கொள்கைகளுக்கு முரணானவை எனக் கருதப்படுபவை ஏற்புடையதல்ல. கீழ்காணும் திட்டங்கள் மார்ஜின் தொகை திட்டத்தில் சேர்க்கப்படாதவையாகும்

அ) இறைச்சி பதப்படுத்துதல், பீடி, சிகரெட், பீடா, மதுபான வகைகள் விநியோகிக்கும் சிற்றுண்டி, புகையிலை, கள்ளு தயாரித்தல் சம்மந்தபட்ட தொழில்கள்

ஆ) தேயிலை, காபி, ரப்பர் முதலியவை பயிரிட, பட்டுப் பூச்சி வளர்த்தல், தோட்டக் கலை, பூக்கள் பதனிடுதல், விலங்குகள் பராமரித்தல், பன்றி, கோழி, மீன் வளர்த்தல் முதலானவை.

இ) சுற்றுப்புறச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தும் தொழில்கள்

20 மைக்ரானுக்கு குறைவான தடிமன் உள்ள பாலிதீன் பைகள் தயாரித்தல், மறுசூழற்சி முறையில் உபேயாகிக்க முடியாத பிளாஷ்டிக் பொருட்கள் மற்றும் ஏனைய சுற்றுச் சூழல் கெடுதல் ஏற்படுத்தும் தயாரிப்புகள்.


கடன் பெற தகுதியுடையவர்கள்

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற கீழ்க்காணுபவர்கள் தகுதியுடையவர் ஆவர்.

தனி நபர்கள் / பதிவு பெற்ற நிறுவனங்கள் / கூட்டுறவுச் சங்கங்கள் / டிரஸ்ட் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழு போன்றவை ஆகும்.



கடன் தொகை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச தேவையான ரூ. 25,00,000/- வரை வேலை வாய்ப்பிற்கிணங்கி தேசிய வங்கியின் மூலம் கடனாக வழங்கப்படும்.

(தனியார் / பொது நிறுவன கம்பெனி, கூட்டாளிகள், இணைந்த கடனாளிகள் போன்றோருக்கு இத்திட்டத்தில் தகுதியில்லை)

கிராமப் பகுதி

“கிராமப் பகுதி” என்பது மொத்த மக்கள் தொகை 20,000க்கு குறைவாக இருப்பின், அது வருவாய் கிராமத்தின் கீழ் / நகரப் பஞ்சாயத்து / நகரியம் ஆக இருப்பின் இத்திட்டத்தில் பலன் பெற முடியும்.

1. மாநில அரசின் ஆணையின் கீழ் ஏதாவது பகுதி வருவாய் கிராமத்தின் பிரிவில் வந்தால் தகுதியுடையதாகும்.

2. மேலும் நகரப் பகுதியாக இருந்து, அந்த நகரின் மக்கள் தொகை 20,000/- க்கு குறைவாக இருப்பின் தகுதியுடையதாகும் (1991 சென்சஸ்).

விளிம்புத் தொகை

பொது பிரிவினருக்கு ரூ.10,00,000/- வரையிலான திட்டத் தொகையில் 25 சதவீதம் கே.வி.ஐ.சி யினால் உதவித் தொகையாக (மார்ஜின் தொகை) வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் முதல் 25 லட்சம் வரையான வங்கிக் கடனுக்கு 10% மான்யம் வழங்கப்படும். (அதிகபட்ச மான்யம் ரூ.4,00,000)

பெண்கள், சிறுபான்மையினர், உடல் ஊனமுற்றோர், இராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்றோர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், மலை ஜாதியினர் ஆகியேருக்கு ரூ.10 லட்சம் வரையிலான திட்டத்தொகையில் 30% மார்ஜின் தொகை கிடைக்கும். 10 லட்சத்திற்கு அதிகமாகவும் ரூ.25 லட்சம் வரையிலான திட்டத்தொகையில் 10% மார்ஜின் தொகை வழங்கப்படும். (அதிகபட்ச மானியம் ரூ.4,50,000).

கடன் பெறுபவர் செலுத்தும் தொகை

பொது பிரிவினர் இத்திட்டத்தின் கீழ் திட்டத்தொகையில் 10 சதவீதம் சுயமாக முதலீடு செய்யவேண்டும். கடன் பெறுபவர் பெண் / எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி மற்றும் நலிந்த பிரிவினராக இருப்பின் திட்டத் தொகையில் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.

கடன் அளவு

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பொதுப்பிரிவின் கீழ் கடன் பெறுபவராக இருப்பின் திட்டத்தொகையில் 90 சதவீதம் ஒப்புதலும் மற்றும் நலிந்த பிரிவினர் / நிறுவனமாக இருப்பின் 95 சதவீதம் ஒப்புதலும் அனைத்து முழுகடன் தொகையையும் வழங்கவேண்டும்.

ஒரு சுற்று செயல்முறைக்கடன் திட்டத்தொகையில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நிலம் வாங்குதல் திட்டத்தில் சேர்க்கக்கூடாது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு நபர், ஒரு முறை மட்டும் பயன் பெறலாம்.

விளிம்புத் தொகையை ஈடுகட்டுதல்

கோட்ட கதர் கிராமத் தொழில்கள் அலுவலகம், மதுரையில் குறிப்பிட்ட 17 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில் விளிம்புத் தொகையினை மொத்தமாக சேமிப்புக் கணக்கில் கே.வி.ஐ.சி. பெயரில் டெபாசிட்டாக வைத்துள்ளது. வங்கி கிளைகளில் கடன் உதவியில் முதல் தவணை அளிக்கப்பட்ட பிறகு மார்ஜின் தொகைக்கு தகுதி பெற்ற தொகையை 2 ஆண்டு கால நிலை வைப்பு என கடன் பெறுபவர் பெயரில் கடன் வழங்கப்பட்ட கிளையிலேயே வைப்பு நிதியாக வைக்கப்படும்.

கடன் வழங்கி 2 ஆண்டுகள் முடிந்த பின்பு அந்நபரின் வங்கிக் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும்.




திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

1. கனரா வங்கி

2. இந்தியன் வங்கி,

3. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

4. ஆந்திரா வங்கி

5. விஜயா வங்கி

6. பேங்க் ஆப் இந்தியா

7. யூனியன் பாங்க் ஆப் இந்தியா

8. பாங்க் ஆப் பரோடா

9. சிண்டிகேட் வங்கி

10. பஞ்சாப் நேஷனல் பேங்க்

11. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்




இதர முக்கிய விபரங்கள்

1. மொத்த திட்ட மதிப்பீடு ரூ.25.00 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.

2. ஏற்கனேவ செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கோ அதனை விரிவாக்கம் செய்யவோ திட்டத்தில் மானியம் வழங்கப்படமாட்டாது.

3. மொத்த திட்ட மதிப்பீட்டில், சுய முதலீடு 50%க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

4. தொழில் தொடங்குவோருக்கு கல்வித் தகுதி வயது வரம்பு கிடையாது.

5. மூலதனக்கடனுக்கும் சேர்த்து மானியம் வழங்கக்கூடிய ஒரே திட்டம் இது.



மேலும் விவரங்களுக்கு

ஊரக தொழில்கள் ஆலோசனை சேவை மையம்

கோட்ட அலுவலகம்

கதர் கிராமத் தொழில்கள் ஆணையம்

(சிறு குறுந்தொழில் அமைச்சகம், இந்திய அரசு)

10, புறவழிச்சாலை, மதுரை - 10

போன் 0452 - 2386792


ஆதாரம் இந்திய முன்னேற்ற நுழைவாயில்

6 நவ., 2008

திசுவளர்ப்பு வாழை பயிரிடுதல்




திசுவளர்ப்பு என்றால் என்ன ?
செடியின் ஏதேனும் ஒரு பகுதியையோ அல்லது ஒன்றோ அல்லது பல செல்களை கொண்டோ, சோதனை குழாயில், கட்டுப்பாடு மற்றும் சுகாதார நிலையில், பயிர்ப்பெருக்கம் செய்வதாகும்.

பயிர் செய்வதற்கான காலநிலை
 வாழை, ஒரு வெப்பமண்டலம் சார்ந்த பயிராகும். இது 130C-380C வெப்பம் மற்றும் 75-85% ஈரப்பதத்தில் நன்றாக விளைய கூடிய பயிராகும். இந்தியாவில், ஈரப்பதம் உடைய மற்றும் வறண்ட பகுதியில் வாழை பயிரிடப்படுகிறது. வாழை, 120Cக்கு கீழ் பயிரிடப்பட்டால், குளிர்தாக்கம் ஏற்படுகிறது. வாழை சாதாரணமாக, 180C வெப்பத்தில் வளர தொடங்கி, 270C வெப்பத்தில் நன்றாக வளர்ந்து, பின்னர் வளர்ச்சி குறைந்து, 380C வெப்பத்தில் வளர்ச்சி பாதிப்படைகிறது. மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் உள்ள காற்று, பயிரை சேதப்படுத்தும்.

மண்
 வாழைக்கு, நல்ல வடிகால், போதுமான ஈரம் மற்றும் ஊட்டம் நிறைந்த மண்தேவை. அமிலநிலை 6-7.5 உள்ள, ஆழமான மற்றும் செழுமையான, பசளைமண், வாழை சாகுபடிக்கு உகந்த மண்ணாகும். வடிகால் சரியில்லாத மண், காற்றுட்டம் கம்மியாக மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள மண், வாழை சாகுபடிக்கு சரியான மண் அல்ல. உவர் சுண்ணாம்பு மண்ணும் ஏற்றதல்ல. தாழ்ந்த பகுதிகள், மிகவும் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பகுதிகளும் வாழை சாகுபடிக்கு உகந்தது அல்ல.


அதிக அமிலம் மற்றும் காரதன்மையற்ற, அதிக கரிமப்பொருளுடன் அதிக தழைச்சத்து மற்றும் ஏராளமான சாம்பல்சத்து மற்றும் போதுமான மணிச்சத்துடன் கூடிய மண், வாழை சாகுபடிக்கு ஏற்ற மண்ணாகும்.

இரகங்கள்
இந்தியாவில், வாழை, பல வானிலை அமைப்புகளிளும், பல்வேறுபட்ட உற்பத்தி அமைப்புகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, இரகங்கள், தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேர்வு செய்யப்படுகிறது. எனினும் டுவார்ப் கேவென்டீஷ், ரொபாஸ்டா, மொந்தன், பூவன், நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி, கற்பூரவல்லி மற்றும் கிராண்ட்நைன் போன்றவை பிரபலமானவை. இதில் கிராண்ட்நைன், இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த இரகமானது, உயிர்சார்ந்த தாக்கங்களுக்கு, எதிர்ப்புதிறன் உடையதாகவும் மற்றும் நல்ல தரமான தார் அளிப்பதாகவும் இருப்பதால், தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. தாரில், சீப்புகள் நன்கு இடைவெளிவிட்டும், சீப்புகளில் உள்ள பழம், மிக நேராகவும் மற்றும் பெரியதாகவும் இருக்கின்றது. மேலும் பழமானது கண்கவர் ஒருமித்த மஞ்சள் நிறங்களாக மாறவும் செய்கிறது. பழுத்த பழங்கள், ஏனைய இரங்களைவிட தரமானதாகவும், நீண்டநாள் இருக்க கூடியதாகவும் இருக்கிறது.

நிலம் தயாரித்தல்
வாழையை நடுவதற்கு முன், பசுந்தாள் பயிர்களான, டெய்ஞ்சா, தட்டை பயிர் போன்ற பயிர்களை விளைவித்து, அதனை நிலத்தினுள்ளே புதைத்துவிட வேண்டும். நிலத்தை, இரண்டிலிருந்து நான்கு முறை உழுது சமன் செய்ய வேண்டும்.

நிலத்திலுள்ள மண்கட்டிகளை ரோட்டவேட்டர் அல்லது கொத்துக் கலப்பையை கொண்டு நயமாக ஆக்கவும். இவ்வாறு நிலத்தை தயாரிக்கும் பொழுதே அடிஉரமான தொழுஉரத்தை போட்டு, நன்றாக கலந்து விடவும். வாழையை நடுவதற்கு, பொதுவாக 45 செ.மீ × 45 செ.மீ × 45 செ.மீ அளவு கொண்ட குழிதேவை. இந்த குழியை 10கிலோ தொழு உரம் (நன்றாக மக்கியவை), 250கிராம் கார்போ பியூரானுடண் கலந்த மேற்பரப்பு மணலை கொண்டு, நிரப்ப வேண்டும். இவ்வாறு தயார் செய்த குழிகளை, சூரிய ஒளிபடுமாறு விடவேண்டும். இவ்வாறு செய்வதால், அபாயகரமான பூச்சி மற்றும் மண்சார் நேய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், காற்றோட்டத்திற்கும் வழி வகுக்கிறது. உவர்களர் மண்ணில், அமிலத் தன்மை 8 இருக்கும் நிலையில், அங்ககப் பொருளை கலக்கும் வகையில், கலவையை மாற்றி கொள்ள வேண்டும்.

நடவுக்கன்றுகள்
சுமார் 500-1000 கிராம் எடையுள்ள அடிக்கன்றுகள் மூலமே வாழை, பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த அடிக்கன்றுகள் நோய் மற்றும் நூற்புழு தாக்கியதாக இருக்கும். மேலும் இந்த அடிக்கன்றுகள், வயது மற்றும் அளவுகளில் வேறுபடுவதால் பயிர் ஒருமித்து இருக்காது. இதனால் பயிர் நிர்வாகம் மற்றும் அறுவடை போன்றவற்றில் மிகுந்த வேறுபாடுகள் காணப்படும். இதனால் திசு வளர்ப்பில் உருவான வாழை கன்றுகளை நடுவதற்கு சிபாரிசு செய்யப்படுகிறது. இக்கன்றுகள், வளமாகவும், நோயற்றதாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கும். முறையாக கடினமாக்கப்பட்ட, இரண்டாம் நிலை கன்றுகள் நடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

திசு வளர்ப்பில் உருவான நடவுக்கன்றுகளின் நன்மைகள் தாய்ச்செடியிலிருந்து, தூய்மையான கன்றுகளை நல்ல மேலாண்மையில் பெறுவதால், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைவு.

ஒருமித்த வளர்ச்சி மற்றும் மேம்பட்ட மகசூல்.

குறைவான வயது.

வருடம் முழுவதும் கன்றுகள் கிடைக்கப் பெறுவதால், வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.

மிக குறைந்த காலத்தில், தொடர்ச்சியாக 2 மறுதாம்பு பயிர்களை செய்வதன் மூலம் சாகுபடிக்கான செலவை குறைக்கலாம்.

30 மாதங்களில் 3 பயிர்கள். அதனால், இடைவெளி விடப்பட்ட அறுவடை இந்த பயிரில் இருக்காது.

90% - 98% மரங்கள், தார்களை தரக்கூடியதாக இருக்கும்.

கன்று நடுவு காலம் திசு வாழையை வருடம் முழுவதும் நடலாம். மிகக் குறைந்த மற்றும் அதிகமான வெப்பத்தை தவிர்க்க வேண்டும். சொட்டுநீர்ப்பாசனம் மிக முக்கியம்.
கிராண்ட் நைன் இரக வாழை


நடவுமுறை வேர்ப்பந்துக்கு இடையூறு ஆகாத வகையில் செடியிலிருந்து பாலீதின் பைகளை பிரித்தெடுத்து, போலித் தண்டினை தரையிலிருந்து 2 செ.மீ-க்கு கீழாக குழியில் புதைக்க வேண்டும். தண்டினை சுற்றியுள்ள மணலை மெதுவாக அமுக்கி விட வேண்டும். ஆழமாக நடுவதையும் தவிர்க்க வேண்டும்.



நீர் மேலாண்மை வாழை ஒரு நீர் விரும்பும் மரம் ஆகும். இதன் உற்பத்திக்கு நீர் அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால், வாழையின் வேர்களோ நீரை உறிஞ்சுவதில் திறன் குறைந்தவைகள் ஆகும். அதனால், நீர்ப்பற்றாக்குறையுள்ள இன்றைய சூழலில் வாழை சாகுபடி செய்வதற்கு சொட்டு நீர்ப்பாசனம் மிகவும் அவசியமாகும்.

வாழை சாகுபடி, செய்வதற்கு ஒரு வருடத்திற்கு 2000மிமீ, நீர் தேவைப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மற்றும் ஈரப்பராமரிப்பு தொழில் நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் வாழையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகப்படுத்தலாம். வாழையில், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 56% நீரை சேமிப்பதுடன் 23-32% மகசூலையும் அதிகப்படுத்தலாம்.

கன்றினை நட்டவுடன் பாசனம் செய்ய வேண்டும். போதுமான நீரை ஊற்றி நில நீர் கொள்ளளவு திறனை பராமரிக்க வேண்டும். அதிகமான நீர் வேர்பகுதியில் காற்றோட்டத்தைக் குறைத்து வளர்ச்சியை பாதிக்கும். இதனால் சொட்டு நீர் பாசனமே, வாழையின் சிறந்த நீர் மேலாண்மை வழியாகும்.
நன்றி --