1 ஆக., 2015

மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

தேன் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
யாருக்கு தேன் தேவைப்பட்டாலும் ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?” என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம் அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே தட்டுப்பாடுதான்!
தேவை இருக்கும் பொருளுக்குத்தானே மரியாதையும் அதிகம். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி மலையை அடுத்துள்ள மந்திரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் போல இவருடைய குடும்பம், கடந்த மூன்று தலைமுறையாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது!

பருத்தி விவசாயியின் வெகுமதி!

அந்தப் பகுதியில் போய் திருஞானசம்பந்தத்தின் தோட்டத் துக்கு வழிகேட்டால் ‘தேன்காரர் தோட்டம்தானே! என்றபடி அனுப்பி வைக்கிறார்கள். தேன் சேகரிக்கும் பணியில் மனைவி ரேவதியுடன் சேர்ந்து, பரபரப்பாக இருந்த திருஞானசம்பந்தம், நம்மைக் கண்டதும் தேனாகப் பேசத்தொடங்கினார்.

”எங்க அப்பாவோட தாத்தா பேரு கந்தசாமி. வெள்ளைக்காரன் காலத்துல இவர், பருத்தி வியாபாரி. ஊர் ஊரா போயி, விவசாயிகள்கிட்ட பருத்தியை கொள்முதல் செய்றப்போ… பல்லடம் பக்கத்துல ஒரு விவசாயி, பருத்திக்காட்டுல பெட்டிகளை வெச்சு, தேன் சேகரிச்சுட்டு இருந்ததைப் பார்த்திருக்காரு. அதுல ஆர்வமாகி, அவர்கிட்ட இருந்து ஒரு பெட்டியை வாங்கிட்டு வந்து, எங்க தோட்டத்துல வெச்சுருக்கார். அதுல நல்லா தேன் கிடைக்கவும், நிறைய பெட்டிகளை வெச்சு, தேனை சேகரிச்சு விக்க ஆரம்பிச்சுருக்காரு. ஒரு கட்டத்துல நல்ல வருமானம் கிடைச்சதால, பருத்தி வியாபாரத்தைக் கைகழுவிட்டு, முழுநேரமா தேனீ வளர்ப்புல இறங்கிட்டாரு.
‘நல்ல வருமானம் கிடைக்குற தேனீ வளர்ப்புத் தொழில் தன்னோட போயிடக்கூடாதுனு மகள் வழி பேரனான என் அப்பா வேலுச்சாமியையும் பழக்கப்படுத்திட்டாரு.
எங்க அப்பா, இன்னிக்கு வரைக்கும் தேனீ வளர்த்து, வருமானம் பாத்துட்டு இருக்காரு. இப்போ நானும், இதுல இறங்கிட்டேன்” என்று முன்கதை சொன்ன திருஞானசம்பந்தம், தொடர்ந்தார்.

வழிகாட்டிய வானொலி!

”ஆரம்பத்துல அப்பாவும், நானும் எங்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு தேனீ வளத்துக்கிட்டிருந்தோம்.
95-ம் வருஷம், ‘ஆல் இன்டியா ரேடியோ’வுல ‘தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பத்தி ‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை பேராசிரியர், முத்துராமன் பேசினாரு. நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கிட்டதும், எனக்கு ஆர்வம் அதிகமாகி அடுத்த நாளே அவரைப் போய் பார்த்தேன். நிறைய சந்தேகங்களைத் தீர்த்து வெச்சு அடுக்குத் தேனீ வளர்ப்புல வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துறதையும் சொல்லிக் கொடுத்தார். அப்பறம், பல்கலைக்கழகத்துல தேனீ வளர்ப்புப் பயிற்சி வகுப்புல சேர்ந்து செயற்கை முறையில ராணித்தேனீயை உருவாக்குற சூட்சமத்தைக் கத்துகிட்டேன். எட்டாம் வகுப்புகூட தாண்டாதவன் நான். இப்ப, என் தோட்டத்துல பல்கலைக்கழக மாணவர்கள் வந்து, தேனீ வளர்ப்புப் பயிற்சியை எடுத்துட்டுப் போறாங்க.
தேனீ வளர்ப்புல பல நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, வழக்கமா செஞ்சுட்டு இருந்த அடுக்குத்தேனீ வளர்ப்பை விட்டுட்டு அதிக மகசூல் கொடுக்குற இத்தாலியத் தேனீக்களை வளக்க ஆரம்பிச்சேன். இப்போ, நானே, ராணித் தேனீக்களை உருவாக்கி, புது காலனிகளை ஏராளமா உருவாக்கிட்டிருக்கேன். அதேமாதிரி, வழக்கமா புகை போட்டுத்தான் தேன் எடுப்பாங்க. நான் புகை இல்லாம தேன் எடுக்குற மாதிரி, சின்னதா ஒரு கருவியை உருவாக்கியிருக்கேன். அதன் மூலமா, ஈக்களுக்கு பாதிப்பில்லாம, தேனை எடுக்க முடியுது” என்ற திருஞானசம்பந்தம், தேனீ வளர்ப்பு பற்றிய சில தொழில்நுட்பங்களையும் பகிர்ந்தார். அதை பாடமாகத் தொகுத்துள்ளோம்.
  
பத்தடி இடைவெளி!

3 ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலியத் தேனீப் பெட்டி ஒன்றின் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய். இதை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலான இடங்களில் ஒன்றரை அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ‘ஸ்டாண்டு’கள் உண்டு. ஒரு பெட்டிக்கும் அடுத்தப் பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில், எறும்பு, பல்லி போன்றவை ஏறாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததில் இருந்து 130 நாட்களில் 3 ஆயிரம் தேனீக்கள் 12 ஆயிரம் தேனீக்களாகப் பெருகிவிடும். இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் இருந்து, 15 நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
ஒவ்வொரு முறை சேகரிக்கும்போதும், 2 கிலோ அளவுக்குக் குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதிலிருந்து நாமே அடுத்த பெட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு பெட்டியிலிருந்து மாதம் சராசரியாக 4 கிலோ அளவுக்கு தேன் கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், பெரியளவில் லாபம் பார்க்க முடியாது.
பொதுவாக தேனீ வளர்த்தால், ஆண்டு முழுவதும் தேன் கிடைக்காது என்று சொல்வார்கள். காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. அதனால்தான் தொடர்ந்து தேன் எடுக்க முடியாமல் போகிறது.
ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும்.’

முருங்கைத் தேனுக்கு கூடுதல் விலை!

தொழில்நுட்பங்களைச் சொல்லி முடித்த திருஞானசம்பந்தம், ”நான், எங்க ஊர்ல இருந்து, 150 கிலோ மீட்டர் தூரம் வரை பெட்டிகளைக் கொண்டு போய் வைக்கிறேன். முருங்கை, கொத்தமல்லி, கடுகு, சூரியகாந்தி, பந்தல் பயிர்கள், தென்னை மாதிரியான பயிர்கள்ல அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்கள்ல பெட்டிகளை வைக்கும்போது, அந்தப் பயிர்களோட மகசூலும் கூடுது. அதனால, விவசாயிகள் அவங்க தோட்டத்துல பெட்டி வைக்கறதுக்கு ஒத்துழைக்கிறாங்க.
அரவக்குறிச்சி, மூலனூர் பகுதிகள்ல நூத்துக்கணக்கான ஏக்கர்ல செடிமுருங்கை விவசாயம் நடக்குது. அந்தப் பகுதிகள்ல எப்பவுமே அதிக அளவுல தேன் கிடைக்கும். அதனால அந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுருக்கேன். முருங்கைத்தேன் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கறதால, அதுக்கு கிராக்கியும் அதிகம். உடுமலைப்பேட்டை, பல்லடம் பகுதிகள்ல, வருஷம் ஒரு போகம் மானாவாரியா நாட்டுக் கொத்தமல்லி விதைப்பாங்க. அது பூவெடுக்கும் சமயத்துல இந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுடுவேன். பொங்கலூர், சுல்தான்பேட்டை பகுதிகள்ல வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகள்லயும் பூவெடுக்குற பருவத்துல பெட்டிகளை வெச்சுடுவேன்.

மாத வருமானம் 1 லட்சம்!

ஒரு பெட்டியிலிருந்து மாசம் சராசரியா 5 கிலோ தேன் கிடைக்கும். 130 பெட்டிகள் மூலமா, மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு தேன் உற்பத்தி செய்றேன். முருங்கைத் தேன் கிலோ 500 ரூபாய்க்கும், மத்த தேன் கிலோ 250 ரூபாய்க்கும் விலை போகுது. 6,500 ரூபாய் முதலீட்டுல ஆரம்பிச்ச இத்தாலியத் தேனீ வளப்பு மூலமா இப்போ, மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்று பெருமிதப் பார்வையை வீசினார்.
நிறைவாக, ”தேனீக்களைப் போல நாமும் சுறுசுறுப்பாக இருந்தாதான் இந்த தொழில்ல லாபம் பாக்க முடியும். பெட்டியை வாங்கி வெச்சுட்டு ‘தேமே’னு உக்காந்து இருந்தா… பல நேரங்கள்ல முதலுக்கே மோசம் வந்துடும்” என்கிற எச்சரிக்கையையும் சொல்லி முடித்தார்.

நிலமே தேவையில்லை…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் இரா. பிலிப்ஸ்ரீதர் தேனீ வளர்ப்புப் பற்றி சொன்ன தகவல்கள்…
”தேனீ வளர்ப்பு லாபகரமான தொழில்களில் ஒன்று. கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட, தேனீ வளர்ப்பு மூலம் சம்பாதிக்க முடியும். தேனீ வளர்ப்பில், ‘விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு’, ‘வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு’ என இரண்டு முறைகள் உள்ளன.
விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத்தேனீப் பெட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது. இம்முறையில், கிடைக்கும் தேனின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால், வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.
வியாபார ரீதியில்… அதாவது, தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும்.
‘எந்த மாதத்தில், எந்த ஊரில் என்ன பயிர் இருக்கும்?’ என்ற தகவல்களைத் திரட்டி, ஒரு வரைபடம் தயார் செய்துகொண்டு… அதன் அடிப்படையில் அந்தந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்தால், அதிகளவில் தேன் அறுவடை செய்யலாம். இம்முறையில், குறைந்தது 100 பெட்டிகளாவது வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். கிட்டத்தட்ட கிடை ஆடு மேய்ப்பது போலத்தான் இத்தாலித் தேனீ வளர்ப்பும். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்தான். ஆடுகளை பகலில் இடம் மாற்றுவோம். தேனீக்களை இரவில்தான் இடம் மாற்ற வேண்டும்.

வில்லங்கமில்லாத விற்பனை வாய்ப்பு !

தேனுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது. முறைப்படி ‘அக் மார்க்’ முத்திரை பெற்று, இதை விற்பனை செய்யும்போது நம்பிக்கை கூடுவதால், விற்பனையும் கூடும். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தினர், அதிகளவில் தேனை கொள்முதல் செய்து, பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். தனியாக, சந்தைப்படுத்த முடியாதவர்கள் இச்சங்கத்தில் விற்பனை செய்யலாம்.
முறையான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், ராணித் தேனீயில் இருந்து ‘ராயல் ஜெல்லி’யை சேகரித்து லட்சக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும்” என்ற பிலிப்ஸ்ரீதர் நிறைவாக,
”நமது நாட்டில் பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெட்டிகளை, பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செழிப்பான பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லாரிகளில் ‘நடமாடும் தேன் உற்பத்திக் கூடங்கள்’ இயங்குகின்றன. அதுபோல இங்கும் வசதிகள் ஏற்பட்டால், இன்னும் ஏராளமானோர் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவார்கள்.
ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி, எங்கள் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி நடத்தி வருகிறோம். ஒரு வேளை அன்று அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதையடுத்த வேலை நாளில் பயிற்சி நடைபெறும். இதற்கு கட்டணம் உண்டு. முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்று சொன்னார்.

தொடர்புக்கு,- டாக்டர். இரா. பிலிப்ஸ்ரீதர், செல்போன்: 94429-18685.

பசுமை விகடன்
 நன்றி :http://ta.vikaspedia.in

வெள்ளரிப் பயிர் சாகுபடி

பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான வெள்ளரியைப் பயிரிட்டால், அடுத்த 50 நாள்களில் அறுவடை செய்து அதிக லாபம் பெற முடியும்.
அனைவரும் அறிந்த, விரும்பி உண்ணும் காய்வகையில் ஒன்று வெள்ளரி. உடலுக்குக் குளுமை தரும் காய்களில் ஒன்றாகவும் வெள்ளரி திகழ்கிறது.

மண், தட்பவெட்ப நிலை

எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மையுடையது. ஆனால், அதிக மகசூல், சாகுபடி பெற வேண்டும் என்றால் களிமண் கூடிய இருமண் பாங்கான மண் வகைகள் மிகவும் ஏற்றதாகும். வெள்ளரி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். குறைந்த வெப்ப நிலை கொண்ட பருவ சாகுபடிக்குச் சிறந்ததாகும்.

பருவம்

ஜூன்- செப்டம்பர் மாதங்களிலும், டிசம்பர்- மார்ச் மாதங்களிலும் சாகுபடி செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். அதன் பின்பு 1.5 மீட்டர் இடைவெளியில், 45 செ.மீட்டர் ஆழம், அகல, நீளத்தில் குழிகளை வெட்ட வேண்டும். அதில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தை இட வேண்டும்.
தொழு உரத்துடன் 100 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண் கலந்து நிரப்பி விதையை ஊன்ற வேண்டும்.

விதையளவு, நடவு

வெள்ளரி சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். விதை ஊன்றுவதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு குழிக்கு 4 முதல் 5 விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் பாய்ச்சுதல்

விதை ஊன்றியவுடன் குடம் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு விதை முளைத்து செடி வளர்ந்தவுடன் வாய்க்கால் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்தவுடன் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பின் செய் நேர்த்தி

விதை முளைத்து வந்தவுடன் குழிக்கு மூன்று செடி விட்டு மற்ற செடிகளைப் பிடுங்கி விட வேண்டும். கொடி வளர்ந்தவுடன் குழியை 30 நாள்கள் இடைவெளியில் களை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியான 25 பிபிஎம் என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி கிராம் அளவில் கலந்து இரண்டாம் இலைப் பருவத்தில் முதல் முறையும், அதன் பிறகு 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தலாம். விதை ஊன்றி 30 நாள்கள் கழிந்த நிலையில் 50 கிராம் யூரியாவை மேலுரமாக இடலாம்.

பயிர் பாதுகாப்பு

பூசணி வண்டு, பழ ஈயின் தாக்குதல் இருக்கும். அப்படி இருக்கும் போது பூசணி வண்டைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரைல் கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
பழ ஈயை கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் கலந்து தெளிக்கலாம். மேலும் பழ ஈயை கருவாட்டுப் பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை, மகசூல்

மேற்கண்ட முறைகளை முழுமையாகக் கையாண்டால் விதை ஊன்றிய 50 நாளில் வெள்ளரிக் காய்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அதன் பிறகு 8 முதல் 10 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 8-இல் இருந்து 10 டன் வெள்ளரிக் காய்கள் கிடைக்கும்

ஆதாரம் : தமிழ்நாடு தோட்டக்கலை துறை
நன்றி :http://ta.vikaspedia.in

29 ஜூன், 2012

நீர்பாசனம்


சொட்டுநீர் பாசனம்

சொட்டுநீர் பாசன முறை என்பது முதன்மை குழாய், துணை குழாய் மற்றும் பக்கவாட்டு குழாய் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறை. ஓவ்வொரு விடுகுழாய்/உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது,
உமிழி வழியாக நீர் மற்றும் ஊட்டச்சத்தானது, வேர் பகுதியில் இருக்கும் மண்ணில், புவி ஈர்ப்பு மற்றும் நுண்புழை சக்தி மூலம் உள்ளே செல்கிறது. நீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்ட உடனேயே, பயிர் நீர் நெருக்கடியிலிருந்து தவிர்க்கப்பட்டு, தரம் மேம்பட்டு போதுமான வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்க வழிவகுக்கிறது.
மாதிரி சொட்டுநீர்ப்பாசன வடிவமைப்பு

நீர் (மனிதனுக்கு இயற்கையின் வரப்பிரசாதம்), மிக வேகமாக குறைந்து கொண்டுவரும் நிலையில், சொட்டு நீர் பாசனம், இன்றைய முக்கியமான தேவையாகும்.
சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள்
  • மகசூலை 150 % அதிகப்படுத்தும்
  • சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
  • பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
  • விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு கிடைத்து விடும்
  • உரம் பயன்பாட்டு திறனில் 30% அதிகம்
  • உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்
  • நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
  • ஏற்ற இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர்தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து சாகுபடி செய்யலாம்
தெளிப்பு நீர் பாசனம்
தெளிப்புநீர் பாசனம் என்பது, நீரை மழைபோல பயிர்களுக்கு வழங்கும் பாசனமாகும். மோட்டார் மூலம் நீரை பைப்புகள் மற்றும் தெளிப்பான் மூலம் தெளிக்கச் செய்து, வயல் முழுவதும் பாசனம் செய்யப்படும். தெளிப்பான் மூலம் தெளிக்கச் செய்வதனால், நீர் சிறு சிறு துளிகளாக மாறி நிலத்தில் விழும்.
   
இப்பாசனத்தின் மூலம், சிறிய மற்றும் பெரிய நிலங்களை மிகச்சுலபமாக பாசனம் செய்யலாம். பல்வேறு வெளியேற்று திறன் கொண்ட தெளிப்பான்கள் கிடைப்பதால், எல்லாவிதமான நிலங்களுக்கும் ஏற்ற பாசன திட்டமாகும்.
இப்பாசன முறையானது, கோதுமை, கொண்டகடலை, பயிறு, காய்கறிகள், பருத்தி, சோயா, தேயிலை, காப்பி, தீவனப்பயிர்கள் ஆகிய அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது ஆகும்.
தகவல்: ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் லிமிடேட், ஜல்கான்வ்

20 செப்., 2011

விவசாயி கடன் அட்டைத் திட்டம்


விவசாயி கடன் அட்டைத் திட்டம்




பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் குறிக்கோளாகும்.
கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன?
  • பணப் பட்டுவாடாநடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது
  • பணம் மற்றும்பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது
  • ஓவ்வொரு பயிருக்கும்தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை
  • எந்த நேரத்திலும்உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது
  • விதைகளையும்உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக் கேற்றவகையில் வாங்கிக்கொள்ளலாம்
  • வாங்கும்போதேமுகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்
  • மூன்றுவருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை
  • விவசாய வருமானம்அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு
  • கடன் வரம்பைபொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்
  • பணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே
  • விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே வட்டி விகிதம்
  • விவசாய கடனுக்குவழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்


கிஸான் கடன் அட்டையைப் பெறுவது எப்படி?
  • உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்
  • தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.
  • பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.

முன்னணி வங்கிகளின் கிஸான் கடன் அட்டைகள்
  • அலகாபாத் வங்கி        - கிஸான் கடன் அட்டை
  • ஆந்திரா வங்கி           - ஏ பி கிஸான் பச்சை அட்டை
  • பரோடா வங்கி           - பி கே சி சி
  • இந்திய வங்கி            - கிஸான் சமாதன் அட்டை
  • கனரா வங்கி             - கிஸான் கடன் அட்டை 
  • கார்ப்பரேஷன் வங்கி      - கிஸான் கடன் அட்டை
  • தேனா வங்கி             - கிஸான் தங்க கடன் அட்டை
  • ஓரியண்ட் காமர்ஸ் வங்கி  - ஓரியண்டல் பச்சை அட்டை
  • பஞ்சாப் தேசிய வங்கி      - பிஎன்பி கிருஷி அட்டை
  • ஹைதராபாத் ஸ்டேட் வங்கி- கிஸான் கடன் அட்டை
  • இந்திய ஸ்டேட் வங்கி     - கிஸான் கடன் அட்டை
  • சிண்டிகேட் வங்கி        - எஸ் கே சி சி
  • விஜயா வங்கி             - விஜய கிஸான் அட்டை


விவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்
விவசாயக்  கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
  • நோக்கம்: விபத்துக்களால் உண்டாகும்  (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்குவது
  • பயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்
  • இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்
  • விபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.
  • நிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில்  ரூ.50,000/- .
  • இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-
  • ஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.
மாஸ்டர் பாலிஸியின் காலம் : 3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது.
காப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்
பிரீமியம்:  விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை  நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்
செயல்படும் வழிமுறைஇந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் நிக்கோபார், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளுக்கான சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .
விவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.
இழப்பீட்டு தொகை பெறும் முறைஇறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களில் நிர்வாக முறைகள் செயல்படுத்தப்படும்.

பயனுள்ள வங்கித்தொடர்புகள்
நன்றி :

10 நவ., 2009

மிளகாய் சாகுபடி

நல்ல மழை பெய்துள்ள நிலையில்  I÷裌 Mõê£Jèœ ïõ‹ð˜ ñ£îˆF™ I÷裌 M¬îŠ¹ ªêŒòô£ñ£ Üšõ£Á ªêŒî£™ ÜÁõ¬ì‚ è£ôñ£ù üùõK *HŠóõK 2010™ ï™ô M¬ô A¬ì‚°ñ£ â¡Á Ýõ½ì¡ âF˜«ï£‚A»œ÷ù˜. Þî¡ ªð£¼†´, îI›ï£´ «õ÷£‡¬ñŠ ð™è¬ô‚èöèˆF™ ÞòƒA õ¼‹ «îCò «õ÷£‡ ¹¶¬ñˆ F†ìˆF¡ àœï£†´ ñŸÁ‹ ãŸÁñF ê‰¬îˆ îèõ™ ¬ñòñ£ù¶ I÷裌 àŸðˆF ªêŒ»‹ ñ£õ†ìƒè÷£ù Þó£ñï£î¹ó‹, M¼¶ïè˜, ðóñ‚°® ñŸÁ‹ ªê¡¬ù I÷裌 Mò£ð£óŠ ð°FèO™ ÝŒM¬ù «ñŸªè£‡ì¶.

     àôA™ I÷裌 õŸø™ àŸðˆFJ½‹ ñŸÁ‹ ¸è˜M½‹, Þ‰Fò£ ºî¡¬ñ ï£ì£è M÷ƒ°Aø¶. àôè ªñ£ˆî I÷裌 õŸø™ àŸðˆFJ™ Þ‰Fò£ 36 êîiî‹ ðƒ° õA‚Aø¶. Þ‰Fò£¬õˆ ªî£ì˜‰¶ Yù£ (11 êîiî‹), ðƒè÷£«îw (8 êîiî‹), ªð¼ (8 êîiî‹) ñŸÁ‹ ð£Av (6 êîiî‹) ÝAò è÷ I÷裌 õŸø™ àŸðˆFJ™ ðƒ° õA‚A¡øù. Þ‰Fò£M™, I÷裌 õŸø™ àŸðˆFJ™ ݉FóŠ H«îê‹ (53 êîiî‹) ºî™ ñ£Gôñ£°‹. Þî¬ùˆ ªî£ì˜‰¶ è˜ï£ìè£, ñè£ó£w®ó£, åKú£, îI›ï£´ ñŸÁ‹ ñˆFòŠH«óîê‹ ÝAò ñ£Gôƒèœ º¬ø«ò 13,9,7 ñŸÁ‹ 2 êîiî‹ ðƒ°è¬÷ õA‚A¡øù.

     îI›ï£†®™ I÷裌 õŸøô£ù¶ 2007 *08™ 0.67 ô†ê‹ â‚ìK™ ꣰𮠪êŒòŠð†ì¶. Þ¶ èì‰î ݇¬ì‚ 裆®½‹ (2006- 07) 9.83 êîiî‹ ÜFèñ£°‹. Ýù£™ õŸø™ àŸðˆF¬òŠ ªð£Áˆî õ¬ó 2006 -07 ݇¬ì‚ 裆®½‹ 21 êîiî‹ 2007 -08™ °¬ø‰¶œ÷¶. 2007 -08 Ý‹ ݇´ ÜÁõ¬ì êñòˆF™ ªðŒî ñ¬ö«ò àŸðˆF °¬øò è£óíñ£°‹. Þó£ñï£î¹ó‹, Ɉ¶‚°®, ªðó‹ðÖ˜ ñŸÁ‹ M¼¶ïè˜ ñ£õ†ìƒèœ îI›ï£†®¡ ªñ£ˆî àŸðˆFJ™ Í¡P™ Þó‡´ ðƒA¬ù ÜO‚A¡øù. ªð£¶õ£è, Þ‰Fò£M™ I÷裌 õóˆî£ù¶ Ü‚«ì£ð˜ ñˆFJ™ ªî£ìƒA «ñ ÞÁFõ¬ó c®‚°‹. ºî™ õóˆ¶ Ü‚«ì£ð˜ ï´õ£‚A™ ñˆFòŠ Hó«îêˆFL¼‰¶‹, ïõ‹ðK™ è˜ï£ìè£ML¼‰¶‹, ®ê‹ðK™ ñè£ó£w®ó£ML¼‰¶‹, üùõKJ™ ݉Fó£ ñŸÁ‹ îI›ï£†®L¼‰¶‹ õ¼‹. Þ‰î õóˆîù£¶ «ñ ñ£î‹ ÞÁFõ¬ó c®‚°‹.

     õ˜ˆîèˆ îèõèO¡ ð® ݉FóŠ Hó«îêˆF™ èì‰î ݇´ 0.88 Þô†ê‹ â‚ìK™ I÷裌 ꣰𮠪êŒòŠð†ì¶. Ýù£™ 2008-09 Ý‹ ݇´ 0.82 Þô†ê‹ â‚ì˜ â¡Á °¬ø‰¶ M†ì¶. âQ‹ ªê¡ø õ¼ì‹ A¬ìˆî ï™ô Þô£ðˆ¬î‚ èí‚A™ ªè£‡´ «ñ½‹ 10-20 êîiî‹ ê£°ð®Š ðóŠ¹ ÜFèK‚è õ£ŒŠ¹ Þ¼Šðî£è õ˜ˆîè˜èœ 輶A¡øù˜. è˜ï£ìè£M™ I÷裌 õŸø™ ïì¾ ü§¡ -ü§¬ô ñ£îƒèO™ º®¾¬ì‰îõ£‚A™ Üî¡ õóˆ¶ ñ£îˆF™ âF˜ð£˜‚èŠð´Aø¶.

     Þ‰Fò I÷裌 õŸø½‚° àôA™ Iè ÜFè÷¾ ãŸÁñFˆ «î¬õ àœ÷¶. ÜFè ãŸÁñFˆ «î¬õ ñŸÁ‹ º‚Aò I÷裌 õŸø™ è÷£ù Yù£ ñŸÁ‹ ð£Av èO¡ àŸðˆF‚ °¬ø¾ ÝAò è£óíƒèOù£™ èì‰î Cô õ¼ìƒè÷£è Þ‰Fò£M¡ I÷裌 õŸøL¡ ãŸÁñFˆ «î¬õ ÜFèKˆ¶ õ¼Aø¶. ïÁñíŠ ªð£¼†èœ õ£Kòˆ îèõL¡ ð®, 2009 Ý‹ ݇´ ãŠó™ *Ýèv´ ñ£îƒèO™ 1,66,000 ì¡èœ ãŸÁñF ªêŒòŠð†ì I÷裌 õŸøL¡ ñFŠð£ù¶ Ï.947.315 «è£®ò£°‹. 2007-‹ ݇´ Þ«î è£ôˆF™ 1, 76,255 ì¡èœ ãŸÁñF ªêŒòŠð†ì I÷裌 õŸøL¡ ñFŠ¹ Ï.940.12 «è£®ò£°‹. I÷裌 õŸø™ ãŸÁñF Ü÷¾ 6 êîiî‹ °¬ø‰F¼‰î£½‹ Üî¡ ªð¼ñ£ù‹ 0.8 êîiî‹ ÜFèKˆ¶œ÷¶. Þ‰Fò I÷裌 õŸøL¡ ð£ó‹ðKò Þø‚°ñFò£÷˜è÷£ù ñ«ôCò£, Þ‰«î£«ùCò£, Þôƒ¬è, ñŸÁ‹ ð£Av èO¡ Iè ÜFèˆ «î¬õ«ò Þ è£óíñ£°‹. Þ‰Fò£M¡ ªñ£ˆî I÷裌 ãŸÁñFJ™, ñ«ôCò£ 29 êîi, ðƒè÷£«î£w 19 êîiî‹ ñŸÁ‹ Þôƒ¬è 15 êîiî‹ ðƒ° õA‚A¡øù. ê‰¬îˆ îèõ™èO¡ð® 5 Þô†ê‹ ͆¬ìèœ (1 ͆¬ì * 40 A«ô£) ãŸèù«õ ðƒè÷£«îw‚° ãŸÁñF ªêŒòŠð†´œ÷¶. މ®™ Þ¼‰¶ «ñ½‹ Þ‰Fò I÷裌 õŸø½‚° «î¬õ àœ÷î£è õ˜ˆîè˜èœ 輶A¡øù˜. Ýè«õ àœï£†´ ñŸÁ‹ ãŸÁñFˆ «î¬õèœ I÷裌 õŸøL¡ M¬ô‚° àÁ¶¬íò£è Þ¼‚Aø¶.

     ªð£¶õ£è I÷裌 õŸøL¡ M¬ô üùõK * ñ£˜„ ñ£îƒèO™ ÜFè õóˆî£™ °¬ø»‹ ãŠó™ *«ñ ñ£îƒèO™ õóˆ¶ °¬øõ M¬ô ãŸø ñ¬ì»‹. 𣶠M¼¶ïè˜ ê‹ð£ I÷裌 õŸø™ M¬ô °M‡ì£½‚° Ï.4250 ºî™ Ï.4500 õ¬ó àœ÷¶. ïõ‹ð˜ 2009™ M¬îˆ¶ üùõK 2010™ ꉬ õ¼‹ I÷裌 õŸøL¡ M¬ô¬ò G˜íò‹ ªêŒò èì‰î 12 ݇´è÷£è M¼¶ïè˜ å¿ƒ°º¬ø MŸð¬ù‚ ÃìˆF™ GôMò ê‹ð£ I÷裌 õŸø™ M¬ôè¬÷ Þ‰î ¬ñò‹ ÝŒ¾ ªêŒî¶. Üî¡ð® üùõK * HŠóõK 2010™ ê‹ð£ I÷裌 õŸøL¡ M¬ô °M‡ì£½‚° Ï.4700 ºî™ Ï.4800 õ¬ó Gô¾‹ âù‚ èí‚AìŠð†´œ÷¶. ãŸÁñFˆ «î¬õ ÜFè‹ àœ÷ îI›ï£´ ñŸÁ‹ ݉FóŠ Hó«îêˆF™ Þ¼‰¶ õ¼‹ õóˆî£ù¶ ÞšM¬ô¬òŠ ð£F‚裶 â¡Á ÜPòŠ ð´Aø¶.
âù«õ I÷裌 Mõê£Jèœ ï™ô M¬ô A¬ì‚è õìAö‚° ð¼õñ¬ö‚ è£ôˆF™ º¬øò£ù ðJ˜ «ñô£‡¬ñ¬ò‚ è¬ìH®ˆ¶ I÷裌 õŸø™ õŸø™ ꣰𮠪êŒò ðK‰¶¬ó‚èŠð´A¡øù˜. õìAö‚°Š ð¼õñ¬ö êKò£ù Ü÷¾ ñŸÁ‹ êKò£ù ñ¬ö ï£†èœ â¡Á Þ¼‰î£™ ñ†´«ñ «ñŸÃPò M¬ô A¬ì‚°‹ â¡ð¶‹ Gî˜êù‹.

தகவல் ஆதாரம்; 

10 செப்., 2009

சாகுபடி தொழில் நுட்பங்கள்


 சாகுபடி தொழில் நுட்பங்கள்   
இணைப்புக் செல்ல சுட்டி;
நன்றி: இண்-டி-ஜி

12 பிப்., 2009

நிலக்கடலை - கூடுதல் மகசூல்

நிலக்கடலை - கூடுதல் மகசூல்….

நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற நுண்சத்துக் கரைசலை தெளிக்குமாறு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிர் 25 நாள் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. இந்தத் தருணத்தில் ஊட்டச் சத்து உரக் கரைசல் தெளிப்பது மிகவும் அவசியம்.


இதற்கு டிஏபி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் 1 கிலோ, போராக்ஸ் 200 கிராம், தண்ணீர் 200 லிட்டர் தேவை.


முதல் நாள் மாலை 1 கிலோ டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து, அதை 10 லிட்டர் நீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்ட வேண்டும்.


வடிகட்டிய கரைசலுடன் அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போராக்ஸ் 200 கிராம், பொட்டாஷ் 1 கிலோ ஆகியவற்றை கலந்து 1 டேங்குக்கு அரை லிட்டர் வீதம் 20 கலவை தயாரித்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.



இதேபோல, விதைத்த 25 மற்றும் 40-வது நாள் என 2 முறை தெளிக்க வேண்டும்.


பின்னர், பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தான பிளானோபிக்ஸ் 175 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.


இந்த முறைகளைக் கையாண்டால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு, விழுதுகள் அதிகம் உருவாகி, திரட்சியான மணிகள் கிடைக்கும். இதனால் 25 விழுக்காடு கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் வை. கலியபெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .

நன்றி :-
இயற்கை முறையில் இத்தகைய நுண்சத்துக் கரைசலை    தயாரிக்க முடியும் -தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.